ராமேஸ்வரத்தில் கடுமையான பனி மூட்டம்
ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது;
ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் தென்பட்டதால் படகுகள், ரயில் பாலத்தில் செல்லக்கூடிய ரயில் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.