மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Update: 2019-09-18 05:49 GMT
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் அங்கன்வாடி மைய கட்டடத்தை, அதிகாரிகள் மாற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்