நாளை ஓணம் : தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை மலர் சந்தையில் 600 டன் மலர்கள் விற்பனைக்கு குவிந்தன.

Update: 2019-09-10 05:20 GMT
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தோவாளை மலர் சந்தையில் 600 டன் மலர்கள் விற்பனைக்கு குவிந்தன. வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலையும் மிகவும் குறைந்திருந்தது. எனினும் பூக்களின் விற்பனை மந்தநிலையில் நடைபெற்று வருகிறது. காரணம் மிக குறைந்த அளவிலான கேரள வியாபாரிகள், மலர் சந்தைக்கு வருகை தந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மழை வெள்ளம் பாதித்த கேரளாவில், இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்ததே, இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்