விபத்தில் சிக்கிய சட்டத்துறை அமைச்சரின் அண்ணன் மகன் - நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி

மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Update: 2019-06-11 08:49 GMT
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.  அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் அர்ஜுனுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பில் சமீபத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அர்ஜூன் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்