மது போதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை - ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு இடங்களில், வாகன ஓட்டிகள், முறையாக விதிகளை பின்பற்றுகிறார்களா என, போக்குவரத்து காவல்துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் விதிகளை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.