சென்னை தண்டையார்பேட்டையில் நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-05-12 12:08 GMT
சென்னை தண்டையார்பேட்டையில் நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில்,சந்தேகத்திற்கு இடமாக இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்லக்குட்டி என்பவர் கொருக்குப்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செல்போன் திருடியது  தெரியவந்தது.அவருடன்   இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 16 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.
Tags:    

மேலும் செய்திகள்