சமையல் எரிவாயு விலை உயர்வு

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

Update: 2019-05-01 12:28 GMT
சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.இது தொடர்பான அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.14 புள்ளி 2 கிலோ எடை கொண்ட  மானிய விலை சிலிண்டருக்கு 6 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட மானிய உதவி இல்லாத வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு 22 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு ஏற்ப அரசு மானிய உதவி அளித்து வந்தது.இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்