மதுரை : தடை செய்யப்பட்ட 6 பச்சைக்கிளிகள் மீட்பு

மதுரையில் தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை வீட்டில் வளர்த்து வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-02-09 07:26 GMT
மதுரையில் தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை வீட்டில் வளர்த்து வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய மற்றும் மதுரை வன அதிகாரிகள் நடத்திய சோதனையில் மதுரை வாசுகி நகரில் மணிகண்டன் என்பவர் வீட்டில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு அரிய வகை கிளிகள் மீட்கப்பட்டன. மேலும்,  மணிகண்டனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கிளிகளின் இறகுகள் சேதமடைந்திருந்ததால், மீண்டும் முளைத்து பிறகே, கிளிகளை வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்