"இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் வலியுறுத்தல்

இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-31 12:28 GMT
இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறவேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார். ஊட்டியில் இந்திய மண் வள பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால், நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற 30 விஞ்ஞானிகளுக்கு ஆளுனர் பன்வாரிலால் பதக்கங்களை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்