கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 20 படகுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

Update: 2019-01-13 07:51 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் கடலில் இழுத்து செல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் மீட்டு வந்த போதிலும், 5 படகுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. கடல்சீற்றம் ஏற்படும் காலங்களில் மீன்வளத்துறை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்