காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம்...

நீலகிரி மாவட்டம் கோவை - மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

Update: 2019-01-01 03:50 GMT
நீலகிரி மாவட்டம்  கோவை - மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். கெத்தை அருகே பேருந்து சென்ற போது யானைகள் வருவதை கண்ட ஓட்டுனர்,  பேருந்தை நிறுத்தினார்.  சுமார் ஒரு மணிநேரம் அங்கேயே முகாமிட்ட காட்டுயானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதேபோல் மாலையில், பெரும்பள்ளம் இடத்தில் ஒற்றை யானை ஒன்று பேருந்தை வழிமறித்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்