"சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கம்" - ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன்

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-03 21:29 GMT
சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை  வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் சீரழியும் சி.பி.ஐ. என்ற தலைப்பில் சென்னை ராயபுரத்தில் நடந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகோத்தமன்,  மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை அடிமையாக்கி விட்டதாக தெரிவித்தார். சாமானிய மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகும் அளவுக்கு, ஆள்பவர்கள் சி.பி.ஐ. மதிப்பை குலைக்கும் நடவடிக்கை எடுத்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்