பேருந்துக்காக இனி காத்திருக்க தேவையில்லை : அரசு உதவியுடன் வெளிவர இருக்கும் "மொபைல் ஆப்"

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து எப்போதும் வரும் என்று தெரியாமல் காத்துக்கொண்டிருக்கும் மக்களின் தவிப்பை தீர்க்க, "மொபைல் ஆப்"பை பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2018-09-29 04:40 GMT
* பேருந்து நிறுத்தத்தில் பேருந்து எப்போதும் வரும் என்று தெரியாமல் காத்துக்கொண்டிருக்கும் மக்களின் தவிப்பை தீர்க்க, "மொபைல் ஆப்"பை பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வரும் நேரம், பயணியின் இருப்பிடத்திற்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்கள், வானிலை நிலவரம் என பல்வேறு தகவல்களை எளிதில் அறிந்து கொள்ள, "LOCATE AND ACCESS MY BUS" என்ற மொபைல் ஆப்பிற்கான டெண்டர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

* விரைவில் தமிழக முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த ஆப்பின் தகவல்கள் அனைத்தும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இடம்பெறவுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்