பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் : 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்

திருவண்ணாமலை வேளாண் கல்லூரி 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2018-09-08 12:19 GMT
திருவண்ணாமலை , வச்சனூரில்  அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி கிரிஜா, 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியின் விடுதி காப்பாளர் தங்கபாண்டியன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,  பேராசிரியர்கள் புனிதா, மற்றும் மைதிலி ஆகியோர் தவறான பாதைக்கு அழைத்ததாகவும் கிரிஜா புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர், விடுதி காப்பாளர் தங்க பாண்டியனை தற்காலிக இடைநீக்கம் செய்தார். பேராசிரியர்  புனிதாவை திருப்பூர் மாவட்டத்திற்கும், மைதிலியை கோயமுத்தூர் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார்.மாணவி  கிரிஜாவை வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்தும்  கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்