வாட்ஸ் அப் குரூப்பால் லட்சாதிபதியான 14 பேர்..சிக்கிய ரூ.5லட்சம்,3 கார்கள், 16 பைக்குகள்..Police

Update: 2023-11-29 14:37 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஏராளமானோர் ஒன்று சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சிலர் தப்பியோடிய நிலையில், 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணம், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் என்பவர், வாட்ஸ் அப் குழு மூலம் நபர்களை இணைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்