KKR vs PBKS கொல்கத்தாவை செதர விட்ட ஜானி பேர்ஸ்டோ

Update: 2024-04-27 02:35 GMT

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் பிலிப் சால்ட் 75 ரன்களும், சுனில் நரைன் 71 ரன்களும் குவித்தனர். 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 108 ரன்களும், ஷஷாங் சிங் 68 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் , ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி பெற்றுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்