`உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்` - காங்கிரஸ் முதல்வர் கருத்தால் கூட்டணியில் குழப்பம்

Update: 2024-04-20 07:43 GMT

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர், சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றும், அதற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலங்கானா மாநில முதல் மந்திரி கூறிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்