நாய்கள் கட்டப்படும் இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட பணமூட்டைகள்- அடுத்தடுத்த வெளியான முக்கிய தகவல்கள்

Update: 2024-04-18 13:37 GMT

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில்

உள்ள ஒரு வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நிதி நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான அந்த

வீட்டில் நாய்கள் கட்டப்படும் இடத்தில் பணமூட்டைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் வருமானவரித்துறையினர் அங்கு விரைந்து 3 கோடியே 68 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன், புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 4 கோடியே 9 லட்சம் ரூபாய்

பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்