ஓ.பி.எஸ். மகன் மீது பெண் பாலியல் புகார்.. - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Update: 2023-08-02 11:20 GMT

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத் மீது பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயத்ரி தேவி என்ற பெண், நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி. ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்