சாட்டை, இடும்பாவனத்துக்கு சிக்கல் - பறந்த சம்மன்... NIA அதிரடி... பரபரப்பில் நாம் தமிழர்

Update: 2024-02-05 11:24 GMT

நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை வரும் 8ம் தேதி நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை உத்தரவிட்டுள்ளது...

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள், வீட்டில் இல்லாதவர்களை இன்று விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி சம்மன் அளித்திருந்தது. இதனிடையே, நேரில் ஆஜராக கால அவகாசம் தேவைப்படுவதாக இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்த நிலையில், வரும் 8ம் தேதி ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு வரும் 7ம் தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்