ரேபரேலி தொகுதியில் தொடரும் சஸ்பென்ஸ்..! வெளிவந்த புதிய தகவல்

Update: 2024-04-26 02:32 GMT

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் 2004 முதல் போட்டியிட்டு வென்ற சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாகிவிட்டார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்ற பேச்சு நிலவுகிறது. மறுபுறம் காங்கிரஸ் யாரை களமிறக்கினாலும் டஃப் வேட்பாளரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பிரியங்கா காந்தியின் சித்தப்பா மகன் வருண் காந்தியை களமிறக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் காந்தி வெர்சஸ் காந்தி என்பதை விரும்பாத வருண் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவதை தவிர்த்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலிபைட் தொகுதி எம்.பி.யான வருண் காந்திக்கு இம்முறை அங்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்