நறுமணப் பொருள் எடுக்க காட்டுக்கு சென்ற பெண்... திடீரென மயங்கி நின்ற மூச்சு - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-05-09 07:59 GMT

கேரள மாநிலம் பம்பை அருகே அடர்ந்த காட்டில் உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் சடலத்தை, சுமார் 5 கிலோமீட்டர் கேரள போலீசார் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கணவருடன் நறுமணப் பொருட்கள் சேகரிக்கப்பதற்காக சென்ற இளம்பெண் ஜோனம்மா, திடீரென மயங்கி உயிரிழந்தார். கணவர் அளித்த தகவலின்படி, அங்கு சென்ற கேரள போலீசார், தொட்டில் கட்டி மிகவும் கரடுமுரடான பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் பெண்ணின் சடலத்தை சுமந்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்