கேரளாவில் மேலும் 3 பேருக்கு மெலியோயிடோசிஸ் நோய் அறிகுறி தென்பட்டதால் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கோரோம் கிராமத்தில் 2 பேருக்கு மெலியோயிடோசிஸ் வகை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது மேலும்
3 பேருக்கு அந்த நோய் அறிகுறி இருப்பது தெரிய
வந்தது. இதையடுத்து 3 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாக்டீரியா காரணமாக உருவாகும் மெலியோயிடோசிஸ் நோய்
பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர கணகாணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.