ராகுலின் அரசியல் பயணம்

ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2003 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ராகுல் காந்தி உறுதிப்படுத்தவில்லை. தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

Update: 2019-07-04 01:49 GMT
* ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2003 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ராகுல் காந்தி உறுதிப்படுத்தவில்லை. தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். 

* 2004 ஆம் ஆண்டு, தமது தாயார் சோனியாவின் அமேதி தொகுதிக்கு சென்ற போது ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து விட்டார் என தகவல்கள் வெளியாகின. 

* அரசியலில் அடியெடுத்து வைப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என அப்போது கூறிய ராகுல், எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறினார்.

* இந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு,  மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, அவரது அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

* அந்த தேர்தலில், ராகுல்காந்தி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

* 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாத  ராகுல்காந்தி, அமேதி மற்றும் உத்தரபிரதேச அரசியலில், மட்டுமே கவனம் செலுத்தினார். 

* அதே 2006 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ராகுல் காந்தி, கட்சியில், முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் என ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கோக்கை விடுத்தனர்.

* ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக் கொள்ளாமல், அனைவரையும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.

* கடந்த 2007 ஆம் ஆண்டு, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். ஆனாலும் அந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, 
8 புள்ளி ஐந்து மூன்று சதவிகித வாக்குகளும் 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 

* இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் பதவியையும் ராகுல் ஏற்றார்.


* 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 3 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி.யானார்.

* அதே சமயம், உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழு காரணம் ராகுல் காந்தியே என கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

* அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தினார்
Tags:    

மேலும் செய்திகள்