3 நாடுகளுக்கு ஜனாதிபதி அரசு முறை பயணம்

சைப்ரஸ், பல்கேரியா, செக் குடியரசு ஆகிய 3 நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக புறப்பட்டார்.

Update: 2018-09-02 07:38 GMT
ஐரோப்பிய நாடுகளான சைப்ரஸ்,பல்கேரியா, செக்குடியரசு ஆகிய நாடுகளுக்கு 8 நாள் பயணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர் முதலாவதாக சைப்ரஸ் நாட்டுக்குச் செல்கிறார். அங்கு வரும் 4ம் தேதி வரை தங்கியிருக்கும் அவர், அடுத்ததாக பல்கேரியாவுக்கும், செக்குடியரசு நாட்டுக்கும் செல்கிறார். தனது பயணத்தின்போது அந்நாட்டு அதிபர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ராம்நாத் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்