அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி
அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தனது கடமை எனவும் தெரிவித்தார். பணம் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறதா என்ற கேள்விக்கு, மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதும்,வாக்கு செலுத்தாமல் இருப்பதும் மிகவும் தவறானது என கூறினார். சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற சிவகார்த்திகேயன் முயற்சித்தது பாராட்டிற்குரியது எனவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.