விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா?
விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து
x
விளையாட்டு திருவிழா - 14.11.2018

கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களை பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறி விடு என்று ரசிகர் ஒருவரின் விமர்சனத்துக்கு அண்மையில் கோலி காட்டமாக பதில் அளித்தார். இதனால் விராட் கோலி மீது பி.சி.சி.ஐ. முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், பயிற்சியாளர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கோலி தலையீடு இருந்ததால், பி.சி.சி.ஐ.யின் முக்கிய புள்ளிகள் கோலி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இந்த நிலையில், கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக பதவியில் அமர்த்தலாம் என்று பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலியை விட, கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவதாகவும், கோலி இல்லாமலேயே ஆசிய கோப்பையை ரோஹித் சர்மா வென்றுவிட்டதாகவும் அவர்கள் தரப்பிலிருந்து கூற்றுகள் வைக்கப்பட்டுள்ளன.ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இதுவரை 12 டி20 போட்டியில் களமிறங்கி 11 போட்டியில் வென்றுள்ளது. மேலும் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களை முழுமையாக 3க்கு0 என்ற கணக்கில் ரோஹித் சர்மா வென்றுள்ளார். ஆசிய கோப்பையிலும் ரோஹித் தலைமையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. இது தவிர, ஐ.பி.எல். தொடர்களில் கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பைக்கு சாம்பியன் பட்டத்தையும் மூன்று முறை பெற்று தந்துள்ளார். ஆனால் கோலி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்று தந்தில்லை. இதனால் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இதனால், முதல்கட்டமாக கோலியை டி20 கேப்டன் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்