நேற்று ரத்து...இன்று பறந்த பிரதமர் மோடி...

x

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் நாட்டிற்கு புறப்பட்டார். முன்னதாக, நேற்றைய தினமே பிரதமர் பூட்டான் செல்வதாக இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக பூட்டான் நாட்டிற்கு சென்றுள்ள அவர், பூட்டான் மன்னர் மற்றும் பிரதமரை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான உயர்மட்ட பரிமாற்றம் மற்றும் முதலில் அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் பிரதமரின் இந்த பயணம் அமைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்