பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இம்ரான் கான் திடீர் சவால் | NawazSharif | imrankhan

x

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லண்டனில் இருந்து 4 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் திரும்பினார். ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்ததுடன், சவால் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நவாஸுக்கு எதிரான வழக்குகள் இனி முடிக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார். தனது கட்சியை அழிப்பதுடன், தன்னை சிறைக்கு அனுப்புவதை​யே நவாஸ் நோக்கமாக கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். தான் தேர்தல் பிரச்சாரம் செய்யாவிட்டாலும், நவாஸ் ஷெரீப் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக நிற்கப்போவதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளா​ர். பாகிஸ்தான் மக்களின் மனநிலை மாறிவிட்டதாகவும், இதுபோன்றவர்களுக்கு இனி வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்