நேபாள பிரதமர் அடுத்தமாதம் இந்தியா வருகை

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மூன்று நாள் பயணமாக இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததன் பேரில், நேபாள பிரதமர் ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 2ஆம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசும் அவர், அதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்