"உக்ரைனுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப் போவதில்லை" - ஹங்கேரி பிரதமர் திட்டவட்டம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் ஹங்கேரி விலகியே இருக்கும் என்று ஹங்கேரி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் ஹங்கேரி விலகியே இருக்கும் என்று ஹங்கேரி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். கிழக்கு எல்லையில் ஹங்கேரியை பிரச்சினைக்குள் இழுத்து விட நினைப்பதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், ஹங்கேரி உக்ரைனுக்கு ஆதரவாக எவ்வித ஆயுத உதவிகளும் வழங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். "யாரோ ஒருவர் போரில் நாம் பலிகடாவாகி விடக் கூடாது" என்று தெரிவித்த விக்டர், இந்தப் போரில் இழப்பு மட்டுமே மிஞ்சும் என்பதால், போரில் இருந்து விலகி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
Next Story