ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
x
ஜப்பானில் கட்டுக்குள் வந்த கொரோனா - முழுமையாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

ஜப்பானில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 59 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதனால் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தலைநகர் டோக்கியா உள்ளிட்ட 18 மாகாணங்களில் அமலில் உள்ள அவசர நிலை விரைவில் திரும்பப்பெறப்படும் என்று பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்திருந்தார். அதன்படி ஜப்பானில் நேற்று தேசிய அவசர நிலை திரும்பப்பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மீண்டும் தொற்றுப்பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை கவலை கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்