புராதன சின்னங்கள் மீண்டும் திறப்பு - உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகள் அனுமதி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது.
x
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய, சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிந்தபடி, குறிப்பிட்ட நேரத்தில் 650 பேர் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி என்றும், எல்லா நேரங்களிலும் கூட்டத்தை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு செல்போன் எண்ணுக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்