முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்க திட்டம்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு தர அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது
முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்க திட்டம்
x
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு தர அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரில் பேசிய அந்நாட்டு அதிபர் போல்சனேரோ, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார். பிரேசிலில் 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி, சற்று மந்தமாகவே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்