போட்டியாளர்களுக்கு தனிமைப்படுத்துதல் முறை இல்லை - ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் முறை இல்லை என ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.
போட்டியாளர்களுக்கு தனிமைப்படுத்துதல் முறை இல்லை - ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்
x
ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் முறை இல்லை என ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது. கொரோனா பெருந் தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒலிம்பிக் போட்டி மாற்றப்பட்டது. இந்த நிலையில் தொடரில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், பார்வையாளர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜப்பான் ஒலிம்பிக் தலைவர் டோஷிரோ தெரிவித்து உள்ளார். அடுத்த வாரம் 3 நாள் பயணமாக உலக ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாச் ஜப்பான் வருவதால் இதுதொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்