"மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்கும்" - இலங்கை சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து
இலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளரான மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளரான மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜயரூவன் பண்டார, "இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது கொரோனா அச்சுறுத்தலுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும், "கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலேயே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை எனில், மூன்றாம் அலையின் தாக்கம் இரட்டிப்பாக இருக்கும்" எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Next Story