"அமெரிக்காவின் ஆன்மாவை மீட்போம்" - ஜோ பைடன் வெற்றி உரை (தமிழில்)

ஒட்டு மொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளதாக அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஆன்மாவை மீட்போம் - ஜோ பைடன் வெற்றி உரை (தமிழில்)
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, 290 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கு பிறகு முதல்முறையாக தமது ஆதரவாளர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது பேசிய ஜோ பைடன், ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்றும் அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது என குறிப்பிட்டார். தம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என்றும், நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக போராடி வந்ததாக ஜோ பைடன் தெரிவித்தார். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி என கூறிய, பைடன் பதவி ஏற்றவுடன் திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்,அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே தமது இலக்கு என அவர் தெரிவித்தார். எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஆதரித்துள்ளதால், வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும்,  நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்