"அதிபரானால் இனவெறியை கட்டுப்படுத்துவேன்" - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் பிரச்சாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தாம் அதிபரானால் இனவெறியை கட்டுப்படுத்துவேன் என்று ஜோ பிடன் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிபரானால் இனவெறியை கட்டுப்படுத்துவேன் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் பிரச்சாரம்
x
டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜோ பிடன், தாம் வெற்றி பெற்றால். அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்து, குற்றங்கள் அதிகரிப்பதை தடுத்து, இனவெறியை கட்டுப் படுத்துவேன் என்று கூறியுள்ளார். மக்களை அச்சுறுத்தும் ஆயுதம் தாங்கிய இன வெறியர்களின் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். 
கொரோனா நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு, அதை பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த டிரம்ப் மறுக்கிறார் என்று குற்றம் சாட்டிய அவர், கொரோனாவுக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழப்பதற்கு டிரம்ப் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்