இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் விடுதலை

இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பணய கைதியாக கடத்தப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் ஆயிரத்து 381 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் விடுதலை
x
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பணய கைதியாக கடத்தப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் ஆயிரத்து 381 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாலி அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக ஆயிரத்து 381 நாட்களுக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் பிரஞ்சு சமூக நல ஆர்வலர் சோபி பெட்ரோனின் மற்றும் மற்றும் 2 இத்தாலி நாட்டினர் விடுதலை செய்யப்பட்டனர். தனி விமானம் மூலம் வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.           


Next Story

மேலும் செய்திகள்