மாலியில் ராணுவப் புரட்சி வெடித்தது: அதிபர், பிரதமர் கைது - ஐ.நா அதிர்ச்சி

மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் இப்ராகிம், பிரதமர் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் ராணுவத்தினர் கைது செய்தனர்.
மாலியில் ராணுவப் புரட்சி வெடித்தது: அதிபர், பிரதமர் கைது - ஐ.நா அதிர்ச்சி
x
பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதிபர்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்