அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் கடும் சூறாவளி - 25 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முழுவதும் சூறாவளியில் சிக்கி பறந்தன. மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். சூறாவளியில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 25 பேர் பலியாயினர்.
Next Story