இலங்கை சுதந்திர தின விழா- தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்
இலங்கையில் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபரின் "சிங்களப் பேரினவாதத்திற்கு" தமிழ் மொழியும், தமிழர்களின் உணர்வும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதை மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story