தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி நேற்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பட்டனர் .
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி நேற்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பட்டனர் . விசாரணைக்குப் பின் இன்று யாழ் நீரியல் துறை அதிகாரிகளிடம் 11 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரனா வைரஸ் உள்ளதா என கண்டறிய ரத்த மாதிரியை கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர் . பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 11 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்
Next Story