ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
ரோஹிங்யா இன படுகொலை விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை
x
ரோஹிங்யா இன படுகொலை தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி நெதர்லாந்து புறப்பட்டு சென்றார். மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் மக்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை எதிர்த்து கம்பியா என்ற நாடு மியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும் ஆங் சான் சூகி, இந்த குற்றச்சாட்டை மறுத்து வாதாட உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்