ஆஸ்திரேலியா : புதர் தீ - மக்கள் அவதி
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் புதர் தீயால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் புதர் தீயால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் இந்த புதர் தீக்கு, 4 பேர் பலியாகி உள்ளனர். 300 வீடுகள் மற்றும் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகி உள்ளன. சிட்னி நகரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் இது புதர் தீ காலம் என்றாலும், மூன்று ஆண்டுகள் தொடரும் வறட்சியால் இந்தாண்டு பாதிப்பு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story