இலங்கை : தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல்

இலங்கையின் கேகல்லே மாவட்டத்தின் எட்டியந்தோட்டை பகுதியில் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது.
இலங்கை : தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல்
x
இலங்கையின் கேகல்லே மாவட்டத்தின் எட்டியந்தோட்டை பகுதியில் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டத்திற்குள் நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழர்களின் வீடுகளை சேதப்படுத்தினர். அங்கிருந்த பெண்களிடம் அந்த கும்பல், யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து எட்டியந்தோட்டை காவல் நிலையத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். கோத்தய ராஜபக்சே, அதிபராக நேற்று பதவியேற்ற நிலையில் இந்தத்  தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்