"குழந்தைகளின் சீரழிவுக்கு செல்போனே காரணம்" - போப் பிரான்சிஸ் கருத்து

குழந்தைகளின் சீரழிவுக்கு செல்போனே காரணம், தொழில்நுட்ப நிறுவனங்களே பொறுப்பு என போப் கருத்து.
குழந்தைகளின் சீரழிவுக்கு செல்போனே காரணம் - போப் பிரான்சிஸ் கருத்து
x
குழந்தைகளின் சீரழிவுக்கு செல்போனே காரணம், தொழில்நுட்ப நிறுவனங்களே பொறுப்பு என போப் கருத்து. வாடிகன் சிட்டியில், 'டிஜிட்டலில் குழந்தைகளின் கண்ணியம்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய போப் பிரான்சிஸ், நவீன தொழில் நுட்பத்தினால் குழந்தைகளுக்கு மிக எளிதாக ஆபாச படங்கள் உள்ளிட்ட அனைத்து வித ஆபத்தான விஷயங்களும் கிடைப்பதாக வேதனை தெரிவித்தார். தங்களுடைய லாபத்தை பார்ப்பதற்கு முன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கண்ணியத்தை செல்போன் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப கண்டு பிடிப்பாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். 



Next Story

மேலும் செய்திகள்