இந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்...? - "12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள் "
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உலகில் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானும், இந்தியாவும் அதிகஅளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளிடமும் 150 அணுஆயுதங்கள் தற்போது உள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டில் இது 500 ஆக உயரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீருக்காக பலமுறை இரண்டு நாடுகளும் போர் நடத்தி உள்ளன என்றும், மீண்டும் போர் ஏற்பட்டால் அது, உலக நாடுகளின் இறப்பு விகிதத்தை 2 மடங்காக அதிகரிக்கும் என கொலரடா பல்கலைக்கழக பேராசிரியர் பிரெய்ன் டூன் எச்சரித்துள்ளார்.
Next Story