கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த மல்லையா : முற்றுகையிட்டு "திருடன்" என கூச்சலிட்ட மக்கள்

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் ஆட்டத்தை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட மக்கள், "திருடன்" எனக்கூறி கூச்சலிட்டனர்.
கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த மல்லையா : முற்றுகையிட்டு திருடன் என கூச்சலிட்ட மக்கள்
x
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் ஆட்டத்தை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட மக்கள், "திருடன்" எனக்கூறி கூச்சலிட்டனர். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்ற மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த மல்லையாவை மக்கள் முற்றுகையிட்டு திருடன் என கூச்சலிட்டனர். அதேநேரம் அவரை பிடித்திருப்பதாக ஒரு சிலர் கூச்சலிட்டனர். தொடர்ந்து சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து பாதுகாவலர்கள் உதவியுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.     


Next Story

மேலும் செய்திகள்