மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த திட்டம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த திட்டம் : இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
இலங்கையில் மேலும் பயங்கர தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தினத்தின் போது தாக்குதல் நடத்திய அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இலங்கையில் இன்னும் அதிக அளவில் இருப்பதாகவும் அமெரிக்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு நிபுணர்கள் இலங்கையின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கா தூதர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விஷயங்களில் இலங்கை அரசு பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்